பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வித்துறை அலுவலகங்கள் இடமாற்றம்! - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, July 23, 2024

பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வித்துறை அலுவலகங்கள் இடமாற்றம்!

பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வித்துறை அலுவலகங்களை வேறு இடங்களுக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 
அதன்படி நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் நாகர்கோவில் கல்வி மாவட்ட அலுவலகம் பழைய மாநகராட்சி அலுவலக கட்டிடத்துக்கு வாடகை அடிப்படையில் மாற்றப்பட இருக்கிறது. 

இதேபோல் நாகர்கோவில் ஒழுகினசேரி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் தொடக்க கல்வி அலுவலகமும், பழைய மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் வாடகை அடிப்படையில் மாற்றப்பட இருக்கிறது. 

 நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்துக்கு மாற்றப்பட உள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment