இடைநிலை ஆசிரியர் பணிக்கான காலியிடங்கள் அதிகரிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, July 17, 2024

இடைநிலை ஆசிரியர் பணிக்கான காலியிடங்கள் அதிகரிப்பு

இடைநிலை ஆசிரியர் பணிக்கான நேரடி நியமனம் தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு இருந்தது. இந்த காலி பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அந்த வகையில் முதலில் 1,768 காலி இடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது கூடுதலாக இடங்களை அதிகரித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. 

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘2023-2024-ம் கல்வி ஆண்டுக்காக 1,768 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு கடந்த பிப்ரவரி 9-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர் பதவியில் கூடுதலாக 1,000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான சேர்க்கை அறிவிக்கை www.trb.tn.gov.in என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது' என்று தெரிவித்துள்ளார். இதன்படி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு வருகிற 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வை 26 ஆயிரத்து 510 பேர் எழுத இருக்கின்றனர்.

No comments:

Post a Comment