மாவட்டக்கல்வி அலுவலர்கள் 57 பேர் இடமாற்றம்: பள்ளிக்கல்வித்துறை! - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, August 22, 2024

மாவட்டக்கல்வி அலுவலர்கள் 57 பேர் இடமாற்றம்: பள்ளிக்கல்வித்துறை!

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி விதிகளில் வகை-4-ன் கீழ் வரும் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனை சார்ந்த பணியிடங்களில் பணிபுரிந்து வரும் அலுவலர்கள் நிர்வாக நலன் கருதி இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 
அதன்படி, நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) ஆ.பாலசுப்பிரமணியம், அரியலூர் மாவட்டத்துக்கும் (இடைநிலை), அரியலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபா, திருப்பத்தூர் மாவட்டத்துக்கும் (தனியார் பள்ளிகள்), திருவள்ளூர் மாவட்ட (தனியார் பள்ளிகள்) கல்வி அலுவலர் சிவதாஸ், சென்னை பள்ளிக்கல்வி உதவி இயக்குனராகவும் (சுற்றுச்சூழல்), பள்ளிக்கல்வி உதவி இயக்குனர் எஸ்.ஷகில், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இதேபோல், செங்கல்பட்டு மாவட்ட (இடைநிலை) கல்வி அலுவலர் எஸ்.கே.ரவிச்சந்திரன், சென்னை தொடக்கக் கல்வி உதவி இயக்குனராகவும், கரூர் மாவட்ட (இடைநிலை) கல்வி அலுவலர் க.காமாட்சி, செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். காஞ்சீபுரம் மாவட்ட (தனியார் பள்ளிகள்) கல்வி அலுவலர் கே.ஜெய்சங்கர், சென்னை மாவட்ட (சைதாப்பேட்டை) கல்வி அலுவலராகவும், சென்னை மாவட்ட கல்வி அலுவலர் இ.சத்தியபாமா, காஞ்சீபுரம் மாவட்ட (இடைநிலை) கல்வி அலுவலராகவும், காஞ்சீபுரம் மாவட்ட (இடைநிலை) கல்வி அலுவலர் பி.செந்தில்குமார், ராணிப்பேட்டை மாவட்ட கல்வி அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். இதுபோன்று மொத்தம் 57 மாவட்ட கல்வி அலுவலர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.

No comments:

Post a Comment