‘எமிஸ்’ பணி ஆசிரியர் அல்லாத பணியாளர்களை கொண்டு மேற்கொள்ள நடவடிக்கை - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, August 25, 2024

‘எமிஸ்’ பணி ஆசிரியர் அல்லாத பணியாளர்களை கொண்டு மேற்கொள்ள நடவடிக்கை

‘எமிஸ்’ பணியை ஆசிரியர் அல்லாத பணியாளர்களை கொண்டு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதால், இதுவரை அந்த பணியை மேற்கொண்டு வந்த ஆசிரியர்களுக்கு அதில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது. 


‘எமிஸ்’ பணி 

கல்வி சார்ந்த தரவுகள் மற்றும் செயல்பாடுகளை டிஜிட்டலில் பதிவேற்றம் செய்யும் வகையில், கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) என்ற இணையதளத்தை பள்ளிக்கல்வித்துறை உருவாக்கியது. ஆரம்பத்தில் மாணவர்களின் வருகைப்பதிவு என ஆரம்பித்து தற்போது அனைத்து செயல்பாடுகளும் (துளிர்கல்வி) இந்த ‘எமிஸ்’ தளத்திலேயே பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதனை அரசு பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் ஆசிரியர்கள் தினமும் கையாளுகிறார்கள். இதனால் அவர்களுக்கு கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்த வண்ணம் இருந்தனர். இதுதொடர்பாக ஆசிரியர் சங்கங்கள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதற்கு தீர்வு காணப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

இணையவழி கூட்டம் 

இந்தநிலையில் முதன்மை கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) மற்றும் நேர்முக உதவியாளர் (இடைநிலை) இணையவழி கூட்டம் நடந்தது. இதில் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (தொழிற்கல்வி) கலந்து கொண்டு பல்வேறு அறிவுறுத்தல்கள், ஆலோசனைகளை, நேர்முக உதவியாளர்களுக்கு வழங்கினார். அதன் விவரம் வருமாறு:- 

 * அரசு, அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள அனைத்து குறை, நிறைகளை தலைமை ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசித்து தேவையான விவரங்களை முதன்மைக் கல்வி அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். 

 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 

கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றும் பணிகளை ஆசிரியர்கள் செய்யும் போது கற்றல்-கற்பித்தல் பணிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாக தெரியவருகிறது. ஆகையால் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து எமிஸ் பனியினை ஆசிரியர் அல்லாத பணியாளர்களை கொண்டு மட்டுமே மேற்கொள்ள வேண்டும். 

2023-24 மற்றும் 2024-25 கல்வியாண்டுக்கு நலத்திட்டங்கள் பெற்று வழங்கிய விவரம் அவ்வப்போது எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என பலமுறை அறிவுறுத்தப்பட்டும் இதுவரை 100 சதவீதம் முழுமையாக பதிவேற்றம் செய்யவில்லை. துளிர்கல்வி இதனால் அரசு செயலாளர் மற்றும் இயக்குனரின் கூட்டத்துக்கு முழுமையான சரியான அறிக்கையினை சமர்ப்பிக்க இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே நேர்முக உதவியாளர்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்தி நலத்திட்டங்கள் வழங்கியவுடன் எமிஸ் தளத்தில் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டதை உறுதிசெய்ய வேண்டும். 

 ஆசிரியர்கள் வரவேற்பு அரசின் இந்த உத்தரவுக்கு ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இத்தனை நாள் கடுமையான பணிச்சுமையில் இருந்த ஆசிரியர்களுக்கு இது விடுதலை கிடைத்ததுபோல் உள்ளது என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment