பட்டதாரி ஆசிரியர்களுக்கு ICT பயிற்சி வட்டார அளவில் நடத்திட SCERT இயக்குநரின் செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, August 19, 2024

பட்டதாரி ஆசிரியர்களுக்கு ICT பயிற்சி வட்டார அளவில் நடத்திட SCERT இயக்குநரின் செயல்முறைகள்

Join WhatsApp - Click Here

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறையில் கூறப்பட்டுள்ளதாவது.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணைந்து ஆசிரியர்களுக்கு மாநில அளவில் செயல்திறன்மிகு வகுப்பறை மற்றும் கணினி தொழில்நுட்பவியல் சார்ந்த பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது மாநில அளவில் திருச்சி மாவட்டம், SRM பொறியியல் கல்லூரியில் அளிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவில் கருத்தாளர்களுக்கான பயிற்சியானது 05.08.2024 முதல் 09.08.2024 முடிய இரண்டு சுற்றுகளாக ஒரு ஒன்றியத்திற்கு (6) ஆறு ஆசிரியர்கள் வீதம் நடத்தப்பட்டு வருகிறது. 
மேலும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் (ICT) கட்டகத்திற்கான தயாரிக்கப்பட்ட தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப பயிற்சி காணொலிகளை 08.08.2024 முதல் அனைத்து (தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல்) பாட பட்டதாரி ஆசிரியர்கள் அறிந்துகொள்ளும் வகையில், TNTP Portal-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், வட்டார அளவிலான பயிற்சியில் பங்கேற்கும் முன்னர் இவ்வனைத்து காணொலிகளையும் ஆசிரியர்கள் கண்டு. புரிந்துகொண்டு பயிற்சியில் கலந்து கொள்ளுமாறும், ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படின் அதனை தங்களுக்கு உரிய சனிக்கிழமை நாள்களில் நடைபெறும் பயிற்சி பணிமனையில் நிவர்த்தி செய்துகொள்ளுமாறு அனைத்து வகைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. 
ஒவ்வொரு வட்டார அளவிலும், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் உள்ள கணினிகளின் எண்ணிக்கைக்கேற்பவும், பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கேற்பவும், பயிற்சி நாள்களை உறுதி செய்தும், பயிற்சியில் பங்கேற்கும் பங்கேற்பாளர்களை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் ஒருங்கிணைந்து, ஆசிரியர்களது பணி பாதிக்காத வண்ணம் தெரிவு செய்து, 17.08.2024 முதல் 09.11.2024 முடிய, வேலை நாள்களாக கருதப்படும் சனிக்கிழமைகளில் நடைபெறும் குறுவளமைய பயிற்சியில் ஏதேனும் ஒரு தேதி வாரியாக பணிவிடுவிப்பு செய்து அனுப்பி நாளில் (கணினியின் எண்ணிக்கைக்கேற்ப) வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 
காணொலியில் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு ஏதுவாக நேரடி அனுபவ வாயிலான கற்றல் அணுகுமுறையின் மூலம் இக்குறுவள மையப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மாவட்ட அளவிலான பயிற்சியில் கலந்துகொண்ட கருத்தாளர்கள், குறுவளமைய பயிற்சிக்கு ஒரு மையத்திற்கு இருவர் வீதம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் தெரிவு செய்து, அவர்களை கருத்தாளர்களாக செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. மேலும், பள்ளியின் உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஆய்வக ஒருங்கிணைப்பாளரை இக்குறுவள மைய ஆய்வக பயிற்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேற்படி பயிற்சிக்கு தேவையான செலவினத் தொகையினை (ஏற்கனவே அனுமதிக்கப்பட்டதைப் போன்று) அரசு விதிகளின்படி, குறுவளமையப் பயிற்சிக்கு அந்தந்த மாவட்ட திட்டம் மற்றும் செயல்பாடுகள் (Programme & Activities) நிதியிலிருந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.



No comments:

Post a Comment