TNPSC ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - III (தொகுதி- IIIA) ல் அடங்கிய பதவிகளுக்கான நான்காம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தொடர்பான செய்தி வெளியீடு - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, August 16, 2024

TNPSC ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - III (தொகுதி- IIIA) ல் அடங்கிய பதவிகளுக்கான நான்காம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தொடர்பான செய்தி வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எண்.3, தேர்வாணையச் சாலை, சென்னை - 600 003. செய்தி வெளியீடு பண்டக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -III (தொகுதி - III A) -ல் அடங்கிய கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர், செயல் அலுவலர், கூட்டுறவுத்துறை மற்றும் காப்பாளர், நிலை-II தொழில் மற்றும் வர்த்தகத்துறை பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், 15.09.2022 நாளிட்ட அறிவிக்கை எண் 26/2022-ன் வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிக்கான எழுத்துத்தேர்வு கடந்த 28.01.2023 மு.ப அன்று நடைபெற்று, எழுத்துத்தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 31.08.2023 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, முதலாம் கட்ட சான்றிதழ் சரிப்பார்ப்பு கடந்த 08.01.2024, இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு 03.05.2024 அன்றும் மற்றும் மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு 22.07.2024 அன்றும் நடத்தப்பட்டது. மேற்காணும் பதவிக்கு, மீதமுள்ள ஒரு காலிப்பணியிடத்தை நிரப்பும் பொருட்டு, நான்காம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு 23.08.2024 மு.ப. அன்று தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், எண் 3, தேர்வாணையச் சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்), சென்னை-600 003 ல் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 

மேற்படி நான்காம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை எண் / இடஒதுக்கீட்டு விதி / காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக தெரிவாளர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது நான்காம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தினை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நான்காம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களுக்கு அதற்கான விவரம் SMS மற்றும் E-mail மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். 

நான்காம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கான அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. நான்காம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பில் பங்கேற்க அழைக்கப்பட்ட தேர்வர்கள் எழுத்துத்தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை / இடஒதுக்கீட்டு விதிகள் / விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப பணி நியமனம் வழங்கப்படும். மேலும் நான்காம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தேர்வர்கள் மேற்படி நான்காம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு பங்கேற்க தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கபட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. ச.கோபால சுந்தர ராஜ், இ.ஆ.ப., செயயலாளர்



No comments:

Post a Comment