2024-2025 தொடக்கக்கல்வி- முதல் பருவம் தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள்- வழிகாட்டுதல்கள்: தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, September 6, 2024

2024-2025 தொடக்கக்கல்வி- முதல் பருவம் தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள்- வழிகாட்டுதல்கள்: தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 06  

நக.எண் 018919/ ஜெ2/2024, நாள் 04.09.2024 

பொருள்

தொடக்கக்கல்வி- முதல் பருவம் தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள்- வழிகாட்டுதல்கள் - சார்ந்து, 

பார்வை

மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அவர்கள் துறைத்தலைவர்களுக்கான கூட்டத்தில் வழங்கிய அறிவுரைகள். 

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. மாணவர்கள் கற்றலில் அடைந்துள்ள முன்னேற்றத்தை கண்டறிவதற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் வளரறி (FA) மற்றும் தொகுத்தறி(SA) மதிப்பீடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு 20.09.2024 முதல் 27.09.2024 வரை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான கால அட்டவணை இத்துடன் இணைப்பு-1& 2 ல் இணைக்கப்பட்டுள்ளது. 
இத்தொகுத்தறி மதிப்பீட்டிற்கான வினாத்தாள்கள் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் வினாத்தாள்கள் உரிய நேரத்தில் வழங்கிடவும் நடுநிலைப் பள்ளியில் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து மதிப்பீட்டினை மேற்கொள்ளவும், பின்வரும் வழிகாட்டுதல்களை பின்பற்றி அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) முதல் பருவத்திற்கான தொகுத்திறி மதிப்பீட்டினை நடத்திட அறிவுறுத்தப்படுகிறார்கள். மாவட்டக் கல்வி அலுவலர் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வட்டாரங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கும் 1 முதல் 5 வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்பு. பயிற்றுமொழி மற்றும் பாடவாரியாக உரிய எண்ணிக்கையில் வினாத்தாள்களை நகலெடுத்து வட்டார கல்வி அலுவலர் வாயிலாக வழங்கிட வேண்டும்.















No comments:

Post a Comment