குரூப்-4 காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை உயர்வு! - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, September 12, 2024

குரூப்-4 காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை உயர்வு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-4 பதவிகளில் 6 ஆயிரத்து 244 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த ஜூன் மாதம் 9-ந்தேதி தேதி நடைபெற்றது. 

இந்த தேர்வை, 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியிடப்படும் என்று சமீபத்தில் டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது. இந்த நிலையில், குரூப்-4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் 480 உயர்த்தப்பட்டுள்ளது. 

அந்த வகையில், இளநிலை உதவியாளர் பதவியில் 128 பணியிடங்களும், தட்டச்சர்-14, சுருக்கெழுத்து தட்டச்சர்-15, கணக்காளர்-1, உதவியாளர்-3, இளநிலை கணக்கு உதவியாளர்-8, வன பாதுகாவலர் மற்றும் வன காவலர்-70, பில் கலெக்டர்-47, உதவி விற்பனையாளர்-194 என 480 பணியிடங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதன்மூலம், குரூப்-4 காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 724- ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment