‘எமிஸ்' தள விவரங்களை வைத்து பள்ளிகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வுசெய்ய வேண்டும் கல்வித்துறை உத்தரவு - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, September 14, 2024

‘எமிஸ்' தள விவரங்களை வைத்து பள்ளிகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வுசெய்ய வேண்டும் கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் முழுவிவரங்களும் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) தளம் வழியாக சேகரிக்கப்பட்டு பள்ளிக்கல்வித் 

துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தளத்தில் உள்ள மாணவர் எண்ணிக்கை அடிப்படையில்தான் பாடநூல், சைக்கிள், காலணி, சீருடைகள் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. 

இந்த சூழலில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பம்மதுகுளம் அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறித்த புகார் மீதான ஆய்வில், போலியாக மாணவர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை காட்டி ஏமாற்றியது கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தில் தவறிழைத்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அதன் வட்டாரக்கல்வி அலுவலரை பணியிடை நீக்கம் செய்ததோடு, துறைரீதியாக நடவடிக்கையும் எடுக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. 

இதையடுத்து அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை நேரடியாக ஆய்வுசெய்ய வேண்டுமென மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, தொடக்கக் கல்வித் துறை சார்பில் சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. அதில், ‘எமிஸ்' தளத்தில் உள்ள தரவுகளுடன் ஒப்பிட்டு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்களை உறுதிசெய்ய வேண்டும் எனவும், அதில் ஏதேனும் மாற்றம் இருப்பின் அதன் தகவல்களை இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.


No comments:

Post a Comment