ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு! உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, September 23, 2024

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு! உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II(தொகுதி II மற்றும் IIA பணிகள்)-இல் அடங்கிய பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 14.09.2024 முய. நடத்தப்பட்டது. 

இதில் பொதுத்தமிழ்/பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவுக்கான உத்தேச விடைகள் (Tentative Key) தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் உத்தேச விடைகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள், அதாவது 30.09.2024 மாலை 5.45-க்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள "Answer Key Challenge" என்ற சாளரத்தைப் பயன்படுத்தி மட்டுமே முறையீடு செய்யலாம். இதற்கான அறிவுரைகள் வழிமுறைகள் தேர்வாணைய இணையதளத்திலேயே (www.tnpsc.gov.in) வழங்கப்பட்டுள்ளன. அஞ்சல் வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது



No comments:

Post a Comment