பண்டிகை முன்பணம் பெற அரசு ஊழியர்கள் ‘களஞ்சியம்' செயலியில் விண்ணப்பிக்க வேண்டும்! தமிழக அரசு உத்தரவு - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, October 5, 2024

பண்டிகை முன்பணம் பெற அரசு ஊழியர்கள் ‘களஞ்சியம்' செயலியில் விண்ணப்பிக்க வேண்டும்! தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களின் விவரங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. அதே போல் அரசு ஊழியர்கள் எடுக்கும் விடுப்புகள், சம்பள விவரங்கள் மற்றும் ஊழியர்களின் பணி அறிக்கைகள் ஆகியவற்றையும் டிஜிட்டல் முறையில் கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்காக கருவூலம் மற்றும் கணக்குகள் துறை சார்பாக களஞ்சியம் என்ற செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் பண்டிகை கால முன்பணம் பெறுவதற்கு அரசு ஊழியர்கள் களஞ்சியம் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் கருவூல மற்றும் கணக்குத்துறை சார்பில் அனைத்து சம்பள கணக்குத்துறை அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- 
அனைத்து பணியாளர்களும் தங்களது பண்டிகை முன்பணத்தினை களஞ்சியம் செல்போன் செயலி மூலமாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இனி வரும் காலங்களில் அனைத்து பணவரைவு அலுவலர்களும் தங்களது அலுவலகத்தின் அனைத்து பணியாளர்களையும் பண்டிகை முன்பணத்தினை பெற களஞ்சியம் செயலி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment